ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் - அமைச்சர் என்.ஆனந்த்

லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம் என்று அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று (மே 28) பேசிய அவர், ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார். ஊழல் செய்ய வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கமாக இருக்கும் என்றார். 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி