காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,923 கன அடியிலிருந்து 11,998 கன அடியாக வெகுவாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 74.01 அடியாக உயர்ந்துள்ளதுடன், அணையின் மொத்த நீர் இருப்பு 35.244 டி.எம்.சி.யாக எட்டியுள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
நன்றி:News18