குஜராத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் 242 பயணிகள் இருந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் விமான பயணிகள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. இதனால் அவரின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.