காரைக்காலில் வாக்குப்பதிவு நிறுத்தம்.. VVPAT எந்திரத்தில் கிளம்பிய புகை

புதுச்சேரியில் இன்று (ஏப்.9) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், காரைக்காலில் உள்ள கோத்துகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இருக்கும் VVPAT எந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பேட்டரியில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி