2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல அரசியல் கட்சிகள் மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர்களை அவர் வரவேற்றார்.