மகப்பேறு விடுப்பு முடிந்து, பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பல பெண் காவலர்கள், தங்களது பேறுகால விடுப்பிற்குப் பிறகு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்தனர். கடந்த ஜூன்.3 வரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.