விஐடி போபால் பல்கலைக்கழகம் - மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது

விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக ஸ்டார்ஸ் நிறுவனம் டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களால் 2019 இல் தொடங்கப்பட்டது. ஸ்டார் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் கிராமப்புறத்தைச் சேர்ந்த மொத்தம் 175 மாணவர்கள் (100 சிறுவர்கள் மற்றும் 75 பெண்கள்) இதுவரை பயனடைந்துள்ளனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பெற்ற 32 மாணவர்களுக்கு (16 ஆண்கள், 16 பெண்கள்) 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடிதத்தை போபால் விஐடி-யின் உதவித் துணைத் தலைவர் திருமதி காதம்பரி எஸ் விஸ்வநாதன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி