விருதுநகர்: கட்டுமான தொழிலாளர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் 11 தொழிற்பிரிவுகளில் பதிவு செய்துள்ள 1100 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொத்தனார் பிரிவில் 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும் சான்றிதழ் வழங்கப்படும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, நலவாரிய அட்டை, வங்கி கணக்கு நகல், ஆதார், கடவுச்சீட்டு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி