மகாராஜா என்பவர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரியை ஓட்டிச் சென்ற போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியதில் மகேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த மாதம் இதே பகுதியில் இதே ஊரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் இப்பகுதியில் தொடர் விபத்து நடைபெறுவதால் ஆத்திரமடைந்த எஸ். கல்லுப்பட்டி கிராமமக்கள் மகேஸ்வரியின் உறவினர்கள் நான்கு வழிச்சாலையில் கற்களை வைத்து சாலையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் பேரிக்காடு அமைக்க ஏற்பாடு செய்தனர். மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்