இதன் தொடர்ச்சியாக, இன்று முளைப்பாரி எடுத்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மன், கருப்பசாமி, அடுக்கு முளைப்பாரி, பயிர் முளைப்பாரிகள் அனைத்தும் வளர்த்த இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, சிறிது தூரம் பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்பு பெண்கள், குழந்தைகள் கும்மி அடித்து மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரவு நெடுங்குளம் தெற்காற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் கரகம் எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிலக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.