விசாரணையில் துரைப்பாண்டி வங்கிக் கணக்கில் இருந்து காரியாபட்டி ராம்குமார்(26) என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிக அளவு பணம் அனுப்பியது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமார் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி கிராமத்தில் தார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். பாண்டி(54) என்பவரும் அங்கு பணிபுரிந்து வந்துள்ளார். பாண்டி மற்றும் ராம்குமார் இருவரும் துரைப்பாண்டியிடம் கார் வாங்கித்தந்து ஏமாற்றியுள்ளனர். ரூ.2.40 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கி அதை துரைப்பாண்டிக்கு ரூ.3.40 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.
சில நாட்களில் கார் பழுதானதால் துரைப்பாண்டி கார் கம்பெனிக்கு சென்றபோது அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டி மற்றும் ராம்குமாரிடம் அவர் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் ராம்குமார் இருவரும் சேர்ந்து துரைப்பாண்டியை அடித்து கொலை செய்து தார் ஆலையில் போட்டு எரித்துள்ளனர். 40 நாட்களுக்கு முன் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.