இவருடைய செம்மறி ஆடுகளை மிதிலைகுளம் கண்மாயில் மேய்க்கக்கூடாது என அந்த பகுதியை சார்ந்த நாகலிங்கம் என்பவர் வைரவனை மிரட்டியதாகவும் அதையும் மீறி அந்த ஆடுகளை மேய்த்தால் விஷம் வைத்து கொன்று விடுவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது அதை தொடர்ந்து அந்த கண்மாய் பகுதியில் ஆடுகள் மேய்க்க சென்ற பொழுது விஷம் கலந்த அரிசியை அங்கு வைத்ததாகவும் அதன் காரணமாக 60 ஆயிரம் மதிப்பிலான ஆறு ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வைரவன் அளித்த புகாரின் அடிப்படையில் நாகலிங்கம் மீது நரிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.