விருதுநகர்: கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சம்பட்டி பகுதியில் சற்குணம் வீரலட்சுமி முத்துலட்சுமி ஆகியோருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் வீராசாமி மற்றும் ஈஸ்வரி ஆகியோருக்கும் இடையே பூர்வீக சொத்துப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு நடைபெற்ற தாக்குதலில் வீரலட்சுமி தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவில்லிபுத்தூர் விரைவு மகிளிர் நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. இதில் விஜயகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி