விருதுநகர்: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் பெண் பள்ளி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி வயது 32. இவருடைய கணவர் ஜெயராம் வயது 40. மகேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் எஸ்.கல்லுப்பட்டி விளக்கில் சென்று கொண்டிருந்தபோது திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் ஓட்டி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகேஸ்வரி உயிரிழந்தார். விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய கணவர் ஜெயராம் அளித்த புகார் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி