விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கே.செவல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது 73. இவர் காரியாபட்டி ஏபி மஹால் அருகே நடந்து செல்லும்போது கண்ணன் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயராம் காயமடைந்த நிலையில், அவருடைய மகன் சுப்புராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.