விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர் ரங்கராஜன் வயது 65. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் இவர் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் சாலையை கடக்க முயற்சி செய்தபோது ராஜா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் காயமடைந்த ரங்கராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.