விருதுநகர்: 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா குறண்டி பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்ற 23 வயது நபர் தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நேரு என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து கதிரேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். 

இதில் கதிரேசன் காயமடைந்த நிலையில் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

தொடர்புடைய செய்தி