விருதுநகர்: அடையாளம் தெரியாத டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் காரியாபட்டியிலிருந்து உடையனம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலமுருகன் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காயமடைந்த பாலமுருகன் அளித்த புகார் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி