பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் அமைச்சர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மகளிர் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் முன்னெடுப்பில் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் ராஜாமணி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. "மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!" என்ற இலக்கை அடைய செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முகாமில், கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கமும் உள்ளது. முகாமின் இரண்டாம் நாளான இன்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் தையல் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு பயிற்சி பெறும் பெண்களை நேரில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி