விருதுநகர்: கிராம சபை கூட்டத்தின் தேதி மாற்றம்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராமங்களில் உள்ள ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் - கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 29.03.2025 அன்று நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. • நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல். • நீர்நிலைகளின் தண்ணீர் சேகரிப்பை உறுதி செய்ய உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல். • சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல் (பிரிதி மாதம் 5-ம் தேதி மற்றும் 20-ம் தேதி). • தினமும் தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல். • இதர பொருட்கள் குறித்து விவாதித்தல். எனவே, 29.03.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி