அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி காயம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் தமிழ் இலக்கியா. இவருடைய நான்கு வயது மகள் ஹர்ஷா. இவர் கல்குறிச்சி, விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள முடியனூர் பேருந்து நிறுத்தத் தளத்தில் சாலை ஓரமாக தனது மகனை நிறுத்திவைத்து, பூ வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றதாகவும், நிற்காமல் சென்ற வாகனத்தைக் கண்டுபிடித்து, விபத்து நடத்திய நபர் மீது புகார் அளிக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியா அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி