விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் தவ முருகன் இவருடைய விவசாய நிலத்திற்கு அருகே கழிவுகளை கொட்டி தனபாக்கியம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் எரித்ததாகவும் அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இடத்தில் இருந்த பிவிசி பைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான பிவிசி பைப்புகள் சேதமடைந்ததாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நரிக்குடி காவல் நிலையத்தில் தவ முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.