விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.176 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 1809 புதிய குளங்கள் அமைக்கப்பட்ட பணி நிறைவடைந்துள்ளது. அதன்படி அருப்புக்கோட்டையில் 143, விருதுநகரில் 202, காரியாபட்டியில் 168, நரிக்குடியில் 114, ராஜபாளையம் பகுதியில் 104, சாத்தூரில் 146, சிவகாசியில் 116, ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியில் 102, திருச்சி பகுதியில் 161, வத்திராயிருப்பு பகுதியில் 95, வெம்பக்கோட்டை பகுதியில் 161 குளங்களை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 296 குளங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.