விருதுநகர்: முன்விரோதம் காரணமாக தாக்குதல்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் வெற்றிக்கொண்டான் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது அங்கே இருந்த தங்கமயில் என்பவருக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு வந்த தங்கவேல் அவரை தகாத வார்த்தைகளால் பேசி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து வெற்றிக்கொண்டான் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி