இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்பி-க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, தளபதி, தங்கப்பாண்டியன், சீனிவாசன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள்.
மேலும் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் வழங்கினார்கள்.