அதனைத் தொடர்ந்து திருச்சுழி அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை ஏற்றிக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தது.
அப்போது ஆம்புலன்சிலேயே ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி கடுமையாக அதிகரித்து குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்ததால் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனடியாக பாண்டியன் நகர் பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்தி அங்கேயே பிரசவம் பார்க்க ஆரம்பித்தனர்.
108 ஆம்புலன்சில் பணிபுரியும் அவசர கால மருத்துவ உதவியாளர் ஜெயக்குமார், ஓட்டுநர் முத்து கருப்பையா ஆகியோர் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில் ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து.
தாயும் சேயும் நலமுடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவசர காலத்தில் துரிதமாகச் செயல்பட்டு இளம் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.