விருதுநகர்: வேன் கவிழ்ந்து விபத்தில் 4 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் தந்தையான ராமையா (60) என்பவர் கடந்த வருடம் இறந்துபோனார். இதனைத் தொடர்ந்து ராமையா இறந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் அவரது மகனான திருப்பதி (42) என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திதி கொடுக்க வேண்டி ராமேஸ்வரம் செல்ல முடிவு செய்தனர். 

அதன்படி நேற்றிரவு 11 மணியளவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் 4 மாத குழந்தையான சம்யுக்தா உள்பட சுமார் 30 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க வேண்டி வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நதிக்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் பெருமாள் (45) என்பவர் ஓட்டி வந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மானாசாலை அடுத்துள்ள சாத்திசேரி வல்லக்குளம் அருகே இன்று (ஜன.3) அதிகாலை 2 மணியளவில் வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் இருந்த பெரிய பள்ளத்தில் வேன் சக்கரம் சிக்கிய நிலையில் வேனின் அச்சுப்பட்டை முறிந்து சாலையில் அங்கும் இங்கும் தள்ளாடியது. 

இந்த நிலையில் வேனில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கூச்சலிட்டு அலறிய நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென அருகிலிருந்த அடர்ந்த முள்வேலிக்குள் புகுந்து உருண்டு விபத்தில் சிக்கியது.

தொடர்புடைய செய்தி