வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை முன்பாக விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் வில்லவன், கோதை மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் சந்திரன், பிரியதர்ஷினி வழக்கறிஞர் இனியவன், செல்வின் ஏசுதாஸ் மற்றும் விருதுநகர் மாவட்ட அணி செயலாளர், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.