விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வன்னியம்பட்டி பகுதியில் வாலிபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் இராஜபாளையம் கலங்காபேரி புதூர் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் வீரக்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.