ஸ்ரீவில்லிபுத்தூர்: விவசாயி கொலை.. 3 பேருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரக்காய்பட்டியில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (47). இவர் விவசாயி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சில நபர்கள் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கணேசன் (32), மருதுபாண்டி (27), மகாலிங்கம் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்த கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கும் தலா ரூ.12,000 வீதம் ரூ.36,000 அபராதமும் கட்ட வேண்டுமென தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி