ஸ்ரீவில்லிபுத்துார்: கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மகேஸ்வரி, இவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் இவரைத் தொடர்ச்சியாக கண்காணித்து வரும்போது அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டிலிருந்த கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மூதாட்டி மகேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி