ஸ்ரீவில்லிபுத்தூர்: நீதிமன்ற ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள W. புதுப்பட்டியை சேர்ந்தவர் ராகவன் (36). இவர் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இந்நிலையில் ஏப். 1 நேற்று இரவு தனது வீட்டில் மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு அருகிலுள்ள மாதா மலை செல்வதாக சொல்லி சென்றவர், அங்கு விஷ மருந்தை குடித்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மயங்கி கிடந்தவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார் என மருத்துவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி