கூமாபட்டி வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பட்டுப்பூச்சி, பிளவக்கல், பெரியாறு அணைப்பகுதி, தம்பிபட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் தேங்காய்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.