இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற மாநிலகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி மாதம் 3 வார சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து விவசாய, தானிய பொருள்கள் போன்றவற்றை ஸ்ரீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக கொடுப்பார்கள்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து, மருத்துவம், குடிநீர்,கழிப்பிட செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர்.