மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2025 ஜனவரி 26 ஆம் தேதி கோயில் கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அர்ச்சனாபுரம் கிராம மக்கள் சார்பாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைக்க அனுமதி வழங்காத இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.