விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா நேற்று மாலை (ஜூன் 8) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களான இளநீர், பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனக்காப்பு வைத்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பிரதோஷ விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கிச் சென்றனர்.