ஸ்ரீவி: காவல் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல்.. ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (49) என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திகேயனை கைது செய்தனர். கார்த்திகேயன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும், கடந்த ஆண்டு தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி வெளியில் வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி