ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வரையாடுகள் உள்ளன. இவை பேய்மலை, மொட்டைமலை போன்ற மலைப்பகுதியில் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. சிறுத்தை மற்றும் புலிகள் வரையாடுகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். மேலும் இவற்றிடமிருந்து தப்பிப்பதற்காக வரையாடுகள் உயர்ந்த மலைப்பகுதியில் வசிக்கின்றன.
தற்போது மலைப்பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டிரக்கிங் செல்பவர்கள் வரையாடுகளை நேரில் பார்க்கின்றனர். மேலும் வேட்டையாடுவது தடுக்கப்பட்டு வனப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.