மேலும் அந்த நாய் தெருவில் ஓடும்போது அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் மற்றும் 2 பேரை கடித்துவிட்டு ஓடியதாக தெரிகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுகாதாரத்துறையினர் நாயை பிடித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நகர் பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏவின் காரைக் கழுவ தீயணைப்பு வாகனம் வருகை.. சர்ச்சை வீடியோ