ஸ்ரீவில்லிபுத்துார்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், நத்தம்பட்டி காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட அய்யன் கரிசல்குளம் கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன.

மேலும் ரகசிய தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கனி என்பவர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேற்படி அவரிடம் இருந்து 170 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம், ரொக்கப் பணம் ரூ. 78, 210 ஆகியவற்றை கைப்பற்றிய போலீஸார் பிச்சைக்கனி மீது நத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி