விருதுநகர்: இறந்தும் உயிர் கொடுத்த நபர் (VIDEO)

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அயன்நாத்தம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 46). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 29ஆம் தேதி சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

எனினும் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். அவரது உறவினர்களின் அனுமதியுடன் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அவரது கல்லீரல், சிறுநீரகம், தோல், கண் ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதனால் பலர் பயனடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சங்கரேஸ்வரனின் உடலுக்கு அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயசிங், கண்காணிப்பாளர் டாக்டர் அரவிந்த் பாபு, துணை கண்காணிப்பாளர் டாக்டர் அன்புவேல் மற்றும் செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி