ஸ்ரீவி: தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் இழப்பீடு வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 9 கோடியே 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 6,637 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. 

சுமார் 3,198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 20 லட்சம் மதிப்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணுக்கு ரூ. 18 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை மாவட்ட கூடுதல் நீதிபதி மணி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தனம், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அபர்ணாதேவி மற்றும் அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள், அரசுத்துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி