விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் தகவலின்பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் குருசாமி என்பது தெரிய வந்தது. மேலும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.