விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டியைச் சேர்ந்த மரியாராஜ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரைப் பிடிக்கச் சென்ற காவலர்களைத் தாக்கி தப்பிக்க முயன்றபோது, மரியாராஜ் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.