ஸ்ரீவில்லிபுத்தூர்: செப்புத்தேரோட்ட விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 3 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆண்டாள் ரெங்கமனார் வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாண நாளான இன்று செப்புத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ தளங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திர தினமான இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேர் நான்கு ரதவீதி சுற்றி நிலைய அடைந்தது. திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் விரதம் இருந்து தேரினை வடம் பிடித்து இழுத்தால் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாரின் திருக்கல்யாணத்தை பார்த்ததால் விரைவில் திருமணம் ஆகும் மற்றும் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி