செங்கோட்டை - சென்னை இடையே இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் கடந்த 26-ம் தேதி சென்னை சென்றபோது, கடையநல்லூர் - பாம்பகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி இன்ஜினின் முன் பக்க தகடு சேதமடைந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விசாரணையில் தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வரும், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய இருவரை கைது செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.