இந்த விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வாளகத்தில் ஜூன் 6 நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள் கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, பின்னர் முகூர்த்த பட்டு கட்டப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் உள்ள தேர் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஜூலை 24-ஆம் தேதியன்று கருட சேவை நிகழ்ச்சியும், ஜூலை 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்ட விழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் ஆண்டாள் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், அறங்காவலர்கள், கோவில்அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி