எனவே அதிகாரிகள் தொந்தரவு இல்லாத ஒதுக்குப்புறமான பகுதியை தேர்ந்தெடுக்க, தனது நண்பரான கூமாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, இவரது நண்பரான தங்கேஸ்வரன் ஆகிய மூவரும் சின்னகூட்டம் மலைக்கு பின்புறம் உள்ள தனது மாந்தோப்பில் வைத்து பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு வந்த தகவலின்படி அப்பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற வத்திராயிருப்பு போலீசார் அங்கு ஏராளமான கரிமருந்து மூடைகள், வெடிபொருட்களுடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததைக் கண்டனர். உடனடியாக மூவரிடம் விசாரணை நடத்தியபோது, உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் சின்னப்பர் ஆகிய 5 பேரையும் கைது செய்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்