இந்நிலையில் குப்புசாமியின் வீட்டுக் கதவு திறந்துகிடப்பதாக உறவினர் செல்போனில் தகவல் அளித்தார். குப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிசிடிவி கேமரா, கதவு மற்றும் பீரோவை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்.பி கண்ணன், டி.எஸ்.பி ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே பகுதியில் மேலும் இரு வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. ஏற்கனவே இதே வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 18 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்