இந்த ஒதுக்குப்புறமான வீடு மதுரை சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. முருகன் நாட்டுவைத்தியர் எனவும், வாராவாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமை மட்டும் இங்கு வந்து பொதுமக்களுக்கு வைத்தியம் செய்வது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் ஏற்கனவே இங்கு வந்து, உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த வீட்டில் இருந்த சில பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இங்கு போதைப் பொருள் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை. தற்போது அந்த வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லாத நிலையில், அருப்புக்கோட்டை ஏஎஸ்பி மதிவாணன் தலைமையில் போலீசார் அந்த வீட்டை சிறிது நேரம் ஆய்வு செய்த பின் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.